தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து குடிநீர் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் பணியில் இருந்த இரு தொழிலாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..