யாழ்ப்பாணம் கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மிசாலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..