18,Apr 2024 (Thu)
  
CH
விளையாட்டு

பாண்டியா களமிறங்க வாய்ப்பு இல்லை

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட முதுகுவலி பூரணமாக குணமடையாததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

அதன் பின்னர் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

இறுதியாக ஹர்திக் பாண்டியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெங்களுருவில் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் விளையாடியிருந்தார்.

அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் தொடரிலும் ஹர்திக் பாண்டியா களமிறங்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி அரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில ஹர்திக் பாண்டியா கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.




பாண்டியா களமிறங்க வாய்ப்பு இல்லை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு