17,May 2024 (Fri)
  
CH
BREAKINGNEWS

சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு!

கண்டி, கட்டம்பே பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கராஜில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டபோது, உயிரிழந்தவரின் கால்கள் மற்றும் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவர் முகத்தில் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது, ஆலயத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த சிவில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு