21,Sep 2024 (Sat)
  
CH
BREAKINGNEWS

இரத்தினபுரியில் வௌ்ளப்பெருக்கு!!

களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் இரத்தினபுரியில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். களுகங்கையின் நீர்மட்டம் புளுங்குபிட்டிய பகுதியில் உள்ள நீர் மானியில் 07ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இரத்தினபுரி அலுபொத பிரதான பேருந்து வீதியில் எத்ஓயா பகுதியிலிருந்து மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதிகளை அணுகும் பல கிளை வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு வீடுகளும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர் மட்டம், நீர்மானி எல்லையை எட்டினால் பெரும் வெள்ளம் ஏற்படும் என மக்கள் அச்சம் வௌியிட்டுள்ளனர்.




இரத்தினபுரியில் வௌ்ளப்பெருக்கு!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு