இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டங்களின் போது பெரும் விபத்து ஏற்பட்டது.
இரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதியதில் நான்கு குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர். லிவர்பூல் கால்பந்து கிளப்பின் பிரீமியர் லீக் பட்ட வெற்றியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பலத்த மழை பெய்த போதிலும், ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டனர்.
அப்போது ஒரு கார் கூட்டத்திற்குள் வேகமாக சென்றது.விபத்தில் காயமடைந்தவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறிய காயங்களுடன் மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தாங்களாகவே சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். மேலும் இது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படவில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..