07,Jun 2025 (Sat)
  
CH
உலக செய்தி

புயல்காற்றால் அவசரத் தரையிறக்கப்பட்ட விமானம் :விரைந்த மீட்புப் பணியாளர்கள்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து ரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானம் புயல் காற்று காரணமாக நடுவானில் குலுங்கள் நிலை ஏற்பட்டதால் பயணிகள் இருக்கை மீது மோதியுள்ளனர்.


இதனையடுத்து, விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை உடனடியாக விமானிகள் தரையிறக்கியுள்ளனர்.


இந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் பயணித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பணியாளர் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 


இந்தநிலையில் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக ஏற்பட்டதுடன் பவேரியா விமான நிலையத்தில் இருந்து விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. 




புயல்காற்றால் அவசரத் தரையிறக்கப்பட்ட விமானம் :விரைந்த மீட்புப் பணியாளர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு