29,Jun 2025 (Sun)
  
CH
WORLDNEWS

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்: இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த முறை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.


காசாவின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏமன், தற்போது திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேல் இராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.


ஏற்கனவே இஸ்ரேல்-ஈரான் போரின்போது, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் வழியாகச் செல்லும் அமெரிக்க சரக்கு மற்றும் போர்க்கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இப்போது திடீரென இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.




மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்: இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு