காசாவில் உள்ள உதவி மையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில், மே மாதம் முதல் இதுவரை 800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தகவல் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தீவிரவாத அமைப்பு 2023 அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இந்த மோதலின் ஒரு பகுதியாக, இஸ்ரேலியப் படையினர் காசாவில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, உதவி மையங்களில் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்கள் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ரவினா ஷம்தாசானி தெரிவித்த தகவலின்படி, 2025 மே 7 ஆம் திகதி முதல் இதுவரை 798 பேரின் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 615 பேர் உதவி மையங்களில் உணவு பெற முயன்றபோது கொல்லப்பட்டதாகவும், 183 பேர் உதவி மையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..