09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

பிறந்தவுடன் டாக்டரை முறைத்து பார்த்த குழந்தை - இணையத்தில் வைரலாகும் படம்

உலகில் மிக பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழவே செய்கின்றன. மிகவும் அரிதாக புன்னகை பூக்கும் குழந்தைகளும் உண்டு. அதே சமயம் சில குழந்தைகள் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இன்றி இருக்கும். அந்த சமயத்தில் டாக்டர்கள் எதையாவது செய்து, குழந்தையை அழ வைப்பார்கள்.

இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டயானே டிஜீசஸ் பார்போசா என்ற பெண்ணுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அந்த குழந்தை அழாமல் இருந்தது.

எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை சோதிப்பதற்காக டாக்டர்கள் குழந்தையை அழ வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த குழந்தை அழுவதற்கு பதிலாக தன்னுடைய புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் டாக்டரை முறைத்து பார்த்தது.

பின்னர் டாக்டர் குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்தவுடன் குழந்தை ‘வீல்’ என்று அழுது இயல்பு நிலைக்கு திரும்பியது.

முன்னதாக, டயானே, தனது குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக ஏற்கனவே நியமித்திருந்த தொழில்முறை புகைப்பட கலைஞர் ஒருவர் குழந்தை டாக்டரை முறைத்து பார்த்ததை துல்லியமாக படம் பிடித்தார்.

பின்னர் அவர் அதை ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 




பிறந்தவுடன் டாக்டரை முறைத்து பார்த்த குழந்தை - இணையத்தில் வைரலாகும் படம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு