அமெரிக்கா மில்வாக்கியில் உள்ள மொல்சன் கூர்ஸ் என்ற மதுபான தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
சுமார் 600 கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தவேளை இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் 51 வயது நபர் என்றும் பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலைகாரன் ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில் மொல்சன் கூர்ஸ் தொழிற்சாலையில் ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் சிலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் சில நாட்களிற்கு முன்னரே பணியிலிருந்து நீக்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் மற்றொரு ஊழியரின் தொழிற்சாலைக்குள் நுழைவதற்கான அனுமதிப்பத்திரத்துடன் உள்நுழைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments
No Comments Here ..