கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவைத் தாண்டி பல உலக நாடுகளுக்கும் அச்சம் தந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பயணம் செய்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பயணம் மேற்கொள்ளும் போது சளி, இருமல், தும்மல் கொண்ட சக மனிதரின் தொடர்பிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும்.
வெளிநாட்டுப் பயணங்களை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.
பயணம் மேற்கொண்டு திரும்பியதும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால் நலம்
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில், விமானம், பேருந்துகள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
பல நாடுகள் திருவிழா, கொண்டாட்ட நிகழ்வுகளை ரத்து செய்திருந்தாலும் உங்களுடைய சொந்த விழாக்களையும் ரத்து செய்வது நலம்.
குறிப்பிட்ட கால இடைவேளைகளுக்கு நடுவே 20 விநாடிகளுக்குக் கைகளைக் கழுவ வேண்டும்.
அனைத்து இடங்களுக்கும் மாஸ்க் அணிய வேண்டிய தேவை இல்லை.
0 Comments
No Comments Here ..