சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்காக அவர்களின் உறவினர்களுக்கு குறித்த திகதி மற்றும் நேரமொன்றை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதற்கான புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.prison.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக e-visit தகவல் அமைப்பு மூலம் தேவையான தரவை உள்ளிட்டு, குறித்த கைதியை பார்வையிடுவதற்கு திகதி மற்றும் நேரமொன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கு சிறைக்கைதிகளின் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியே தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..