06,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிக்கப்பட்ட படையினர்!

நாடு முழுவதும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்திற்கும் இரண்டு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன(Nilantha Premaratna) தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக அரசாங்கத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மூவர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.





இலங்கை முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிக்கப்பட்ட படையினர்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு