29,Mar 2024 (Fri)
  
CH
உலக செய்தி

உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத உதவிகளை வழங்கிய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்

உக்ரையின் ரஷ்யா போர் தொடங்கி ஒருவருடத்தை கடந்த நிலையிலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன. 


இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ரொக்கெட் லோஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார். 


ரஷியா உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.





உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத உதவிகளை வழங்கிய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு