04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல்

இந்த தாக்குதல் உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரிவி ரிஹ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து மாடி கட்டிடத்தை தாக்கியதாகவும் இந்த தாக்குதலில் 3 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. 


20 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தாகவும் டினிபிரோபெட்ரோவிஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


16 மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் தற்போது இந்த ஊர் சிக்கியுள்ளது. ஏவுகணை அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது, ஜன்னல்கள் உடைந்தது உள்ளிட்ட படங்களை ஜெலன்ஸ்சி வெளியிட்டுள்ளார். 


மேலும் பயங்கரவாத ஏவுகணைகள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ரஷியாவின் கொலைக்காரர்கள் தொடர்ந்து கட்டிடங்கள், கிராமங்கள் மற்றும் மக்களுக்கு எதிராக போரை தொடர்கின்றனர் எனத் குறிப்பிட்டுள்ளார். 

நேற்றிரவு முழுவதும் பல்வேறு இடங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் முறியடித்துவிட்டதாகவும், சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் கிவ் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இதேவேளை உக்ரைன் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக அறிவித்த நிலையில் ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.





உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு