சீனாவில் மிகவும் விரைவாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி சீ ஜிங் பிங் எச்சரித்துள்ளார்.
சீனாவின் அரசாங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற அவசர கூட்டமொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீனா தற்போது மோசமான சூழ்நிலை எதிர்கொள்வதாகவும் அந்த நாட்டு ஜனாதிபதி சீ ஜிங் பிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஹூஹான் நகர் பகுதியில் தனியார் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய மருத்துவமனைகளை நிர்மாணிப்பதற்காக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கை எதிர்வரும் வாரங்களில் நிறைவடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஹூஹான் மற்றும் ஹூபே பகுதிகளில் விசேட இராணுவ மருத்துவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..