கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனரென்ற சந்தேகத்தின் பேரில் சீனாவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட ஜப்பானியர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜப்பானியர்கள் மூவர் இவ்வாறு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் இருவர் இன்று சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சர்வதேச ரீதியில் இதுவரை ஏழாயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்காயிரத்து 500 பேர் பேர் சீனாவின் hubei பிராந்தியத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..