17,May 2024 (Fri)
  
CH
WORLDNEWS

பரிதாபம் – குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்த தாய்!

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரை சேர்ந்தவர் மரிகா தாமஸ் (வயது 26). இவருக்கு ஒருமாத பெண் குழந்தை உள்ளது. இவர் நேற்று முன்தினம் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.

மைக்ரோவேவ் ஓவன் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் குழந்தையின் ஆடை மற்றும் குழந்தையை சுற்றிவைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தால் கருகி எரிந்தது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு பரிசோதித்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயான மரிகா தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மரிகா தாமஸ் மனநலம் பாதிக்கபப்ட்டவர் என தெரியவந்துள்ளது.




பரிதாபம் – குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்த தாய்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு