மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினராக இன்று டெல்லியில் பதவி ஏற்றுக்கொண்டார். திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அவர், "இந்தியனாக எனது கடமையைச் செய்யப் போகிறேன்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்ற கமல்ஹாசன், தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
பதவியேற்பு விழாவில், “கமல்ஹாசன் எனும் நான், இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்” என்றும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
0 Comments
No Comments Here ..