20,May 2024 (Mon)
  
CH
WORLDNEWS

மியன்மார் பயங்கரவாதிகளால் மற்றுமொரு இலங்கையர் சிறைப்பிடிப்பு!

சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌிப்படுத்தியிருந்தோம்.

இந்த குழு மியான்மரில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டு சைபர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றமை தெரியவந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் மற்றுமொரு இலங்கையர் சைபர் அடிமை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அந்த இலங்கையர் மியான்மரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வௌியிட்டுள்ளார்.


அவர் வௌியிட்ட தகவலுக்கு அமைய, மேலும் 15 பேர் கொண்ட மற்றுமொரு குழு குறித்த முகாமுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.




மியன்மார் பயங்கரவாதிகளால் மற்றுமொரு இலங்கையர் சிறைப்பிடிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு