தொழில்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் பூமியின் வெப்பநிலையானது தற்போது 1.45 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய காலநிலை அறிக்கையானது ஆண்டுக்கு ஒருமுறை ஐநாவின் உலக வானிலை அமைப்பால் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, சராசரி வெப்பநிலை 174 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியுள்ளது. தொழில்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 1.45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடலின் வெப்பநிலை 65 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
0 Comments
No Comments Here ..