09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

சீன இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வூஹான் நகரம்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வூஹான் நகரை சீன இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளதுடன், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வூஹான் நகருக்கான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. 

இதன் காரணமாக அங்குள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இந்த நிலையிலேயே, வூஹான் நகரம் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

வூஹான் நகரம் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு அத்தியவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




சீன இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வூஹான் நகரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு