20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வார இறுதியில் பிரதமர் இந்தியா பயணிக்கவுள்ளார்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்தவார இறுதியில் இந்தியா பயணிக்கவுள்ளார்.

பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது சுட்டிக்காட்டத் தக்கது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் குறித்து, பிரதமரின் அலுவலகம் நேற்றைய தினம் (03) வெளியிட்ட அறிக்கையினூடாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 7 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணிக்கவுள்ள பிரதமர் 11 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஆகியோரைச் சந்திக்கவுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இருதரப்பு உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே இருந்துவரும் நல்லுறவினை மேலும் விரிவாக்கும் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தச் சந்திப்புகளின் போது, இரு நாடுகளின் அரசியல், வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு, பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை முதலான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.




வார இறுதியில் பிரதமர் இந்தியா பயணிக்கவுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு