17,May 2024 (Fri)
  
CH
BREAKINGNEWS

பெற்றோரின் கண்முன்னே பறிபோன குழந்தையின் உயிர்!

அம்பாறை – பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் குழந்தையொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை இங்கினியாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 02 வயதும் 07 மாதமான குழந்தையே உயிரிழந்தது. வீதிக்கு அருகாமையில் உள்ள விகாரை ஒன்றுக்கு குழந்தையுடன் பெற்றோர் சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த போது, ​​குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து மீறி வீதிக்கு வந்துள்ளது. இதன்போதே இவ்விபத்தை எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இங்கினியாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





பெற்றோரின் கண்முன்னே பறிபோன குழந்தையின் உயிர்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு