17,May 2024 (Fri)
  
CH
WORLDNEWS

இலங்கையர்களை பணயக் கைதிகளாக்கிய பாகிஸ்தானியர்கள்!

பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி நான்கு இலங்கையர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 04 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாள பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய பிரஜைகள், கனடா மற்றும் ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான தகவல் கொடுத்து நான்கு இலங்கையர்களிடம் பணம் பெற்றுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நான்கு இலங்கையர்களும் பாகிஸ்தானிய பிரஜைகளால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதுடன் அவர்களது கடவுச்சீட்டுகளும் பறிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளான இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேபாள பொலிஸார் தெரிவித்தனர். கடத்தல் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.





இலங்கையர்களை பணயக் கைதிகளாக்கிய பாகிஸ்தானியர்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு