கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேர வாவிக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (06) காலை கொம்பனித்தெரு பொலிஸாருக்கு இந்த சடலம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 05 அடி 06 அங்குல உயரம் மற்றும் நீல நிறச் சாரம் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலத்தில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..