கொரேனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பெல்ஜியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி சீனாவின் ஊகான் நகரில் இருந்து பெல்ஜியத்திற்கு வருகை தந்த 9 பேரில் குறித்த நபரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
இவர்கள் அந்நாட்டில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான மருத்துவ பரிசாதணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் காரணமாக ஹம்பாந்தோட்டை-மாத்தறை அதிவேக நெருஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..