20,May 2024 (Mon)
  
CH
WORLDNEWS

10 வருடங்களுக்கு பின் உயிருடன் வந்த காதலன்!

சீனாவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் கோமாக்கு சென்ற நபரொருவர் 10 ஆண்டுகளுக்கு பின் காதலால் மீண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த நபரொருவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுயநினைவுக்கு திரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்த போதும் அவருக்கு நினைவு திரும்பாததால் அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

எனினும் தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என மனைவி உறுதியாக நம்பினார். மேலும் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்திய அவர் வீட்டில் கணவரை தொடர்ந்து கவனித்து வந்தார். இதன் பயனாக அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அதில், படுக்கையில் விழித்திருக்கும் கணவரின் அருகில் சன்ஹாங்சியா அமர்ந்திருக்கும் காட்சிகளும் கடந்த சில வருடங்களாகவே அவர் அனுபவித்த வலிகளை பற்றி கூறும் காட்சிகளும் உள்ளன. அப்போது அவரது கணவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.





10 வருடங்களுக்கு பின் உயிருடன் வந்த காதலன்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு