அமெரிக்காவின் அரசியலமைப்பின் 22 வது திருத்தப்படி விதிகளின்படி பொருத்தவரை ஜனாதிபதியாக விரும்பும் ஒருவர் இரண்டுமுறைகள் மாத்திரமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலில்தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டோனல் டிராம்ப் அமெரிக்க தான் அடுத்த தேர்தலிலும் போட்டியிடப்போவதாக கூறிவந்தார்.
இதைத்தொடர்ந்து, இது சட்டத்துக்கு முரணான விடையமென்று பலரும் விமர்சித்துவரும் நிலையில் , அடுத்தத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள்கூறிதான வேலைத்திட்டங்களை ட்ரம். முன்னெடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகிவந்தது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலில் ட்ரம்ப், "இது நான் செய்ய விரும்பும் ஒன்றல்ல. நான் ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகளும் சிறப்பாக செயல்படுவேன். இது குறித்து முடிவு எடுக்க சிறந்த குடியரசுக் கட்சிக்காரரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.
பலர் நான் அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனக்கு இவ்வளவு வலுவான கோரிக்கைகள் ஒருபோதும் வந்ததில்லை. உங்களுக்குத் தெரியும், எனக்கு ஒரு துணைத் தலைவர் இருக்கிறார். ஜே.டி.வான்ஸ் அற்புதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான, புத்திசாலித்தனமான பையன்."அவர் கூறினார்.
0 Comments
No Comments Here ..