இந்தியாவில் கடந்த 48 மணிநேரத்தில் 769 புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டின் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேர் தொற்றினால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றினால் 65 பேர் உயிரிழந்ததாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், கேரள மாநிலத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..