09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ஜப்பானில் நிற்கும் கப்பலில் இதுவரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, ஜப்பானில் கப்பல் ஒன்று துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த அந்த கப்பல் யோகோகாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, அதில் உள்ளவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனையில் ஏற்கனவே 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

கப்பலில் உள்ள 3700 நபர்களில் இதுவரை 273 பேருக்கு மட்டுமே கொரோனா குறித்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்போது, மேலும் பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படலாம் என அஞ்சப்படுகிறது.




ஜப்பானில் நிற்கும் கப்பலில் இதுவரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு