09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ஹூபே மாகாணத்திற்கான மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது!

கொரோனா வைரஸ் காரணமாக அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்திற்கான மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனினும், பாதுகாப்பு உபகரணங்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் சீனாவின் ஹூபே மாகாணத்தின் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

அத்துடன் தேவைக்கேற்ற உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக சீன அதிகாரிகள் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதன் காரணமாக குழந்தைகளுக்கான பால்மாவை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 




ஹூபே மாகாணத்திற்கான மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு