03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய டோரியஸ்

பிரித்தானிய சுகாதார அமைச்சரும், கொன்சவேடிவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நடின் டோரியஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பிரித்தானிய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில், இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதுடன், 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று காரணமாக, 118 நாடுகளில் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 907 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் 80 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 136 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகளவானோர் பலியாகியுள்ளனர்.

631 பேர் அங்கு பலியாகியுள்ளதுடன், 10 ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 8 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலியானோர் எண்ணிக்கை 291 ஆக உயர்வடைந்துள்ளது.




கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய டோரியஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு