லண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரி சிமொன்ஸ் இன்று (புதன்கிழமை) குழந்தையினை பிரசவித்துள்ளார்.
கேரி சிமொன்சின் பிரசவம் சற்று முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நிகழ்ந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாய் மற்றும் சேய் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமரின் ஊடக பேச்சாளர், பொரிஸ் ஜோன்சன் தம்பதிகளுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளமையினையும், தாய் மற்றும் மகன் நலமுடன் இருப்பதையும் மக்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய சுகாதார சேவை பணியாளர்கள் அனைவருக்கும் பிரதமர் மற்றும் சிமொன்ஸ் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அண்மையில் நலமடைந்து கடந்த திங்கட்கிழமை அலுவலகம் திரும்பியிருந்த நிலையில் குறித்த மகிழ்ச்சியான விடயம் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..