இன்றைய நண்பகல் நிலவரப்படி, சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 16,169 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஏழாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தங்கு விடுதிகளில் வசிக்கும் மொத்தமுள்ள சுமார் 3,23,000 வெளிநாட்டு ஊழியர்களில், இதுவரை 13,354 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் சுமார் 4.1 விழுக்காடாகும்.
ஏப்ரல் 29ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 1,188 பேர் கோவிட் 19 நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..