பல நாடுகளில் பொது முடக்க நிலை படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அங்கு மீண்டும் போக்குவரத்து நெரிசல் உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மிதிவண்டியை பயன்படுத்த சில நாடுகள் ஊக்கமளிக்க தொடங்கியுள்ளன.
பிரான்ஸில் வரும் மே 11-ஆம் தேதி முதல் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து காரணமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என மக்கள் பலரும் கருதுகின்றனர். இதனால் பலரும் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதால், மிதிவண்டி பயன்பாட்டை அதிகரிக்க இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசு எடுத்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரான பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸெல்சில், 40 கி.மீ தூரத்திற்கு மிதிவண்டி பாதையை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..