பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் புதிதாக 6,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை மொத்தம் 79,685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 5500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்து பிரேசில் அதிபர் போல்சனாரோவிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ,’’ அதனால் என்ன? மன்னித்து விடுங்கள். நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? ’’ என அவர் பதிலளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மனெளஸ் நகரம் இருக்கிறது. மே மாதம் நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக அந்த நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..