சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 932 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது.
6 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக கொரோனா தொற்றுகள் நாடாக உருவெடுத்துள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள்தான் அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர்.
கொரோனா தொற்றின் தீவிரத்தை சிங்கப்பூர் அரசு குறைவாக மதிப்பிட்டதே, இந்த அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் உருவாக காரணம் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
0 Comments
No Comments Here ..