19,Mar 2024 (Tue)
  
CH
உதவிகள்

இந்த காலத்தில இப்படி ஒரு மனஷனா'? மயூர் ஷல்கே

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், அவர் அடுத்ததாக செய்துள்ள ஒரு செயல் அனைவரையும் கலங்கடிக்கச் செய்துள்ளது. பார்வையற்ற ஒரு தாய், தன் ஆறு வயது மகனுடன் அதே நடைமேடையில் நடந்து போய்க்கொண்டு இருந்தார்.கையைப்பிடித்து நடந்து கொண்டிருந்த மகன் திடீரென தாயின் கைப்பிடியில் இருந்து நழுவி ரயில் பாதையில் விழுந்துவிட்டான்



அதனை பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் எதிரே வந்துகொண்டிருந்த வேகமான ரயிலையும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மிகவும் வேகமாக ஓடி வந்து அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.

அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பலரும் மயூரை பாராட்டி வந்தனர். மயூருக்கு ரயில்வே சார்பில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் அந்த தொகையில் பாதியை அக்குழந்தையின் படிப்பிற்காக தருவதாக கூறியுள்ளார். அக்குடும்பம் வறுமையில் வாடுவதை தான் அறிந்ததால் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.







இந்த காலத்தில இப்படி ஒரு மனஷனா'? மயூர் ஷல்கே

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு