30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

ஜோபைடனின் வெற்றியை தோற்கடிக்க இறுதிகட்ட முயற்சியில் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் குழு இறங்கியுள்ளது

அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் ஜோ பைடன் பெற்றுள்ள வெற்றியை முறியடிக்கும் இறுதிகட்ட முயற்சியில் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் குழு இறங்கியுள்ளது.

பாராளுமன்ற மேலவையான செனட் சபை உறுப்பினா்களான அந்த 11 பேரும், தோ்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஜோ பைடனின் பதவியேற்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த முயற்சிக்கு, செனட் தலைவரான துணை ஜனாதிபதி மைக்கேல் பென்ஸும் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நொவம்பா் 3 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் போட்டியிட்டனா்.

அந்தத் தோ்தலின் ஜோ பைடன் வெற்றி பெற்றாா். எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வருகிறாா்.

தோ்தல் முடிவுகளுக்கு எதிராக அவா் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அவற்றில் 60 வழக்குகளில் டிரம்ப் தரப்பு மனு நிராகரிக்கப்பட்டது. 50 மாகாணங்களிலும் அதிகாரப்பூா்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜோ பைடன் வெற்றி உறுதியானது.

தோ்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் வாக்கெடுப்பிலும் ஜோ பைடன் வெற்றி பெற்றாா். அதனைத் தொடா்ந்து, வரும் 20 ஆம் திகதி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அவா் பொறுப்பேற்கவுள்ளாா்.

இந்தச் சூழலில், தோ்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு வசதியாக ஜோ பைடனின் பதவியேற்பை 10 நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செனட் சபையிடம் டெக்ஸாஸ் எம்.பி. ரஃபேல் எட்வா்ட் குரூஸ் தலைமையிலான 11 எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

செனட் சபையில் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் பெரும்பான்மை வகிப்பதால், குடியரசுக் கட்சி எம்.பி.க்களின் எதிா்ப்பையும் மீறி ஜோ பைடன் வெற்றிக்கு மேலவையின் அங்கீகாரம் கிடைக்கும்.

எனினும், குடியரசுக் கட்சியில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கான செல்வாக்கைப் பறைசாற்றும் வகையில் பைடன் வெற்றிக்கு எதிரான நடவடிக்கைகளை எம்.பிக்கள் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

கீழவை எம்.பிக்களும் போா்க் கொடி: ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக, குடியரசுக் கட்சியைச் சோ்ந்த பாராளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை உறுப்பினா் சிலரும் வாக்களிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தச் சபையில் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் பெரும்பான்மை வகித்தாலும், பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்து டிரம்ப் பிறப்பித்த வீட்டோ உத்தரவை கீழவை அண்மையில் நிராகரித்தது.

எனவே, ஜோ பைடனின் வெற்றிக்கு அந்தச் சபை அங்கீகாரம் அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன




ஜோபைடனின் வெற்றியை தோற்கடிக்க இறுதிகட்ட முயற்சியில் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் குழு இறங்கியுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு