26,Apr 2024 (Fri)
  
CH
விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனா, கிரீஸ், ரஷ்யா வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்தியா சார்பில் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும்.

யஷாஸ்வினி ஒன்று முதல் ஆறு சீரிஸில் முறையே 94, 98, 94, 97, 96, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 574-11x அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவவில்லை. இதனால் யஷாஸ்வினி 13-ம் இடத்தையே பிடித்தார். 

இதேபோல், மானு பாகெர் ஒன்று முதல் ஆறு சீரிசில் 98, 95, 94, 95, 98, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 575-14x 12ம் இடம் பிடித்தார்.

முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தனர்.

சீன வீராங்கனை முதலிடமும், கிரீஸ் வீராங்கனை 2-வது இடமும், ரஷ்ய வீராங்கனை 3ம் இடமும் பிடித்தனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு