08,Apr 2025 (Tue)
  
CH
உலக செய்தி

ரஷ்யாவின் 50 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்

உக்ரைன் தலைநகர் மீது தாக்குதலை மேற்கொண்ட ரஸ்யாவின் 50க்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஸ்யா மேற்கொண்ட தொடர்ச்சியா டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


தலைநகரை நோக்கிவந்துகொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ள கீவ்வின் மேயர் மேலும் பல ஆளில்லா விமானங்கள் தலைநகர் நோக்கி வருகின்றன என எச்சரித்துள்ளார்.


ரஸ்யா ஈரானில் தயாரிக்கப்பட்ட 54 சஹெட்ஆளில்லா விமானங்களை அனுப்பியது அவற்றில் 52 ஆளில்லா விமானங்களை வீழ்த்தியுள்ளோம் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கிவ் உட்பட பல நகரங்களில் உள்ள இராணுவகட்டமைப்புகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது எதிரி நள்ளிரவு தாக்குதலை மேற்கொண்டான் இதற்காக பயன்படுத்தப்பட்ட அனேகமான ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.




ரஷ்யாவின் 50 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு