30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மனிதர்கள் முதன்முதலில் அடைந்ததன் 70 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு

1953 மே 29 ஆம் திகதி நியூ ஸிலாந்தின் எட்மன்ட் ஹிலாரி, நேபாளத்தின் டென்ஸிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன்முதலாக அடைந்தனர். 


இந்நிகழ்வின் 70 ஆவது இன்றுகொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் இன்று நடைபெற்ற கொண்டாட்டங்களில் ஏட்மன்ட் ஹில்லரி, டென்ஸிங் நோர்கே ஆகியோரின் மகனமாரும் கலந்துகொண்டனர்.


8,849 மீற்றர் (29,032 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை கடந்த 70 வருடங்களில் 6,000 இற்கும் அதிகமானோர் அடைந்துள்ளனர்.


எனினும், ஏறுவதற்கு ஆபத்தான சிகரங்களில் ஒன்றாக அது காணப்படுகிறது. கடந்த 70 வருடங்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இவ்வருடம் 12 பேர் உயிரிழந்துடன் மேலும் ஐவர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.




எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மனிதர்கள் முதன்முதலில் அடைந்ததன் 70 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு