சீனாவில் ஒரு நபர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் நாள்தோறும் 6 மணிநேரத்தை கழிவறையிலேயே செலவிட்டு வந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவை சேர்ந்த 35 வயதான வாங், அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு வயிற்றில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு நிறுவனமும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பின்னர் சில மாதங்களில் அவர் அதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மெடிக்கல் ரிப்போர்ட்டிலும் அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவே வந்தது. ஆனால் இதற்காக பல நாட்கள் விடுப்பு எடுத்து திரும்பிய போதும், கழிவறையில் நீண்டநேரம் இருக்கும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை. பணிநேரம் மொத்தம் 8 மணிநேரமாக இருந்த நிலையில், 6 மணிநேரம் கழிவறையிலேயே இருந்துள்ளார்.
பல மாதங்கள் இதே வேலையை வாங் செய்து வந்ததால், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த நிர்வாகம், அவரை வேலையை விட்டு தூக்கியது. இதனால் கோபமடைந்த வாங், தான் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், வாங் பணியில் இருந்து நீக்கப்பட்டது சரிதான் என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
0 Comments
No Comments Here ..