04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

கனடாவாழ் இலங்கை பிரஜைகள் பிரித்தானியாவில் விபத்தில் மரணம்.

இந்த விபத்து பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இடம்பெற்றுள்ளது

இரு கார்கள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது இதில் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.


இவ் விபத்தில் மேலும் நால்வர் படு காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவர்.


10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஏ285 வீதியில் சிசெஸ்டர் (Chichester) பகுதியில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

வெள்ளை நிற பிஎம்டபிள்யூ (BMW 220) மற்றும் பழுப்பு நிற மேர்சிடிஸ் (Mercedes C200) ஆகிய இரண்டு கார்கள் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.


இந்த விபத்தில் பிஎம்டபிள்யூ காரில் பயணித்த நால்வரில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்.


மேர்சிடிஸ் (Mercedes C200) காரில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சிசெஸ்டர் (Chichester) நகர் அருகே விபத்து நடைபெற்ற Duncton கிராமப் புறத்தில் வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டுள்ளதால், கார் விபத்து தொடர்பான நேரடி சாட்சியங்கள் இல்லாததால் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். 


திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து பிரித்தானியா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மகன் காயமடைந்துள்ளார்.


இதேவேளை, இவர்கள் பயணம் செய்த பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.





கனடாவாழ் இலங்கை பிரஜைகள் பிரித்தானியாவில் விபத்தில் மரணம்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு