18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வவுனியாவில் பதிவுசெய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - வைத்தியர் வே.மகேந்திரன்

வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக மீளாய்வுசெய்யப்பட்டது.


அந்தவகையில் தனியார் மருந்தகங்களில் பதிவுசெய்யப்பட்ட மருந்தாளர்கள் இல்லாமல் மருந்துகள் வழங்கபடுகின்ற விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. 

வவுனியாவில் 19 தனியார் மருந்தகங்கள் உள்ளது. அவற்றில் 8 மருந்தகங்கள் பதிவுசெய்யப்படவில்லை. அவற்றில் 5 மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனைய மூன்று மருந்தகங்கள் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை எமக்கு வழங்கியுள்ளனர்.


அத்துடன் இங்கு இரண்டு மொத்த வியாபார மருந்தகங்கள் உள்ள நிலையில், அதில் ஒன்று பதிவுசெய்யப்படவில்லை. அதற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தகங்கள் உரியநேரத்திற்கு முன்பாகவே மூடப்படுவதாக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்வதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.





வவுனியாவில் பதிவுசெய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - வைத்தியர் வே.மகேந்திரன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு