02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 35 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகரில் ஐந்தாவது வட்டாரத்தில் இல் கத்தோலிக்க பாடசாலை மற்றும் டிசைன் கல்லூரிக்கான கட்டிடத்திலேயே இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவர் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படும் நிலையில் மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.


வெடிப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் எரிவாயு மணத்தை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ தேவலாயத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளேயே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பிரான்ஸ் அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


வெடிப்பிற்கான காரணத்தை இன்னமும் தீர்மானிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் இடிபாடுகளின் கீழ் சிக்குண்டிருக்ககூடியவர்களை கண்டுபிடிக்க மோப்பநாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன





பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 35 பேர் காயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு