கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார்
வர் அளித்துள்ள பேட்டியில். "டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்து இருப்பது என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏற்கனவே நான் அந்த பகுதியில் 33 முறை சென்று வந்து இருக்கிறேன். அங்கு எனக்கு கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டன. அந்த பகுதியில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் இருக்கும். அதனால் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும். அங்கு ஒவ்வொரு கணமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவோம்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் புதிய தொழில்நுட்பத்தில் சென்சார்ஸ் உள்ளன. அதற்குள் இருக்கும் மனிதர்கள் விபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து இருப்பார்கள். அதில் இருந்து ஜாக்கிரதையாக வெளியேறும் வழிகளும் உள்ளன. ஆனாலும் எதிர்பாராமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்துவிட்டதால் அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர்'' என்றார்.
மேலும் இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்
டைட்டன் நீர்மூழ்கியின் நகர்வு விபரமும் அதனுடனான தொடர்பாடலும் ஒரே நேரத்தில் துண்டிக்கப்பட்டதாக அறிந்தவுடன் அனர்த்தமொன்று ஏற்பட்டிருக்கலாம் என உடனடியாக தான் சந்தேகித்ததாக அவர் கூறியுள்ளார்.
1912ஆம் ஆண்டின் டைட்டானிக் கப்பல் விபத்தும், டைட்டன் நீர்மூழ்கி விபத்தும் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டதன் விளைவுகள் என ஜேம்ஸ் கெமரோன் கூறியுள்ளார்.
டைட்டானிக் கப்பலின் தளபதி எப்படி பனிப்பாறைகள் குறித்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், கப்பலை வேகமாக பனிப்பாறைப் பகுதிகளுக்குள் செலுத்திச் சென்றாரோ அதேபோன்று ஓஷன்கேட் நிறுவனமும் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டுள்ளது என்கிறார் கெமரோன்.
ஆழ்கடல் சுழியோடல் சமூகத்தைச் சேர்ந்த சிலர், ஓஷன்கேட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் கடிதமென்றை எழுதியதாக கெமரோன் தெரிவித்துள்ளார்.
ஓஷன்கேட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய முதல் நபர் ஜேம்ஸ் கெமரோன் அல்லர்.
ஆனால், நீர்மூழ்கியின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்டொக்டன் ரஷ் அசட்டையாக இருக்கவில்லை என ஸ்டொக்டன் ரஷ்ஷுடன் இணைந்து 2009ஆம் ஆண்டு ஓஷன்கேட் நிறுவனத்தை ஸ்தாபித்த குய்லேர்மோ சோன்லெய்ன் கூறுகிறார். 2013ஆம் ஆண்டு ஓஷன்கேட்டிலிருந்து சோன்லெய்ன் விலகியிருந்தார்.
டைட்டனுக்கு என்ன நடந்தது என உடனடியாக அறிய முடியாதுள்ளதாகக் கூறிய அவர், எவ்வாறெனினும் ஆழ்கடல் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
“விண்வெளி ஆராய்சிகளில் போன்று, இந்த 5 ஆய்வாளர்களினதும் நினைவுகளை பாதுகாப்பதற்கான சிறந்த வழி என்னவென்றால், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, என்ன நடந்தது என அறிந்துகொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்கிறார் சோன்லெய்ன்.
விசாரணைகள்
டைட்டன் நீர்மூழ்கி அனர்த்தம் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. டைட்டன் நீர்மூழ்கியின் தாய்க்கப்பலான த போலார் பிரின்ஸ் பதிவு செய்யப்பட்ட நாட்டின் விசாரணை அமைப்பு என்ற வகையில் இவ்விசாரணையை தான் நடத்தவுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. அதேவேளை அமெரிக்கக் கரையோரக் காவல் படையும் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது
0 Comments
No Comments Here ..