04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

பெலருஸில் தஞ்சமடைந்த ரஷிய வாக்னர் குழு தலைவர்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு போரிட்டது. இதற்கிடையே தங்களது குழு மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் குற்றசாட்டி ரஷியாவில் கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார். 


இதையடுத்து அக்குழுவின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரிகோஷின் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபர் லுகா ஷென்கோவின் சமரசத்தை ஏற்று கிளர்ச்சியை கைவிடுவதாக எவ்ஜெனி ரிகோஷின் அறிவித்தார். 


ரஷியா-வாக்னர் குழு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே வாக்னர் குழு வீரர்கள் ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம் அல்லது தங்களது குடும்பங்களுடன் செல்லலாம் என்று ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.


 வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷியாவில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. அவர் சென்ற ஜெட் விமானம் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் அருகே நேற்று காலை தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில் எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் லுகா ஷென்கோ கூறும் பாோது, வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் நாட்டுக்கு வந்துள்ளார். சமரச பேச்சின் போது பிரிகோஷினிடம், வாக்னர் படை ரஷிய தலைநகருக்குள் நுழைந்ததால் அவரது வீரர்கள் அழிக்கப்படுவார்கள். 


பாதி வழியிலேயே நசுக்கப்பட்டு விடுவீர்கள் என்று தெரிவித்தேன். வாக்னர் வீரர்களுக்கான முகாம்கள் பெலாரசில் அமைக்கவில்லை. தேவைப்பட்டால் சில வளர்ச்சியடையாத பகுதிகள் வழங்கப்படும் என்றார்.





பெலருஸில் தஞ்சமடைந்த ரஷிய வாக்னர் குழு தலைவர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு